தம்பதிக்கு ஏரியில் கிடைத்த இரும்புப் பெட்டி: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, ஏரி ஒன்றிலிருந்து ஒரு இரும்புப் பெட்டி கிடைத்தது. அந்தப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. ஆனால்...
Magnet fishing
உலக நாடுகள் சிலவற்றில் magnet fishing என்னும் பழைய பொருட்களை நீர் நிலைகளுக்குள் தேடும் ஒரு விடயம் உள்ளது. ஏதாவது விலையுயர்ந்த பொருட்கள் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில், பெரிய காந்தம் ஒன்றைக் கயிற்றில் கட்டி, நீர் நிலைகளுக்குள் போட்டு தேடுவோர் இருக்கிறார்கள்.
அவ்வகையில், நியூயார்க்கிலுள்ள குயீன்ஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த James Kane மற்றும் Barbie Agostini தம்பதியர், கடந்த வெள்ளிக்கிழமை magnet fishing செய்யும்போது, அவர்களுக்கு ஒரு பெரிய இரும்புப் பெட்டி கிடைத்துள்ளது.
பெட்டியை அவர்கள் திறந்துபார்க்க, அதனுள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது.
தம்பதியருக்குக் கிடைத்த ஏமாற்றம்
அந்தப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக 100 டொலர் நோட்டுக்கள் இருந்துள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவை தண்ணீரில் முழுமையாக நனைந்து நாசமாகிவிட்டன. என்றாலும், இவ்வளவு பணம் கிடைத்ததால் சட்டச் சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாதென்று கருதி பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள் தம்பதியர்.
பொலிசார் வந்து அந்தப் பணத்தை சோதனை செய்துவிட்டு, அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என James, Barbie தம்பதியரிடம் கூறிவிட்டார்கள். காரணம், முதலில் அவை நாசமாகிவிட்டன, இரண்டு அவை யாருடையவை என்பதைக் கண்டுபிடிப்பதற்கான எந்த ஆதாரமும் அந்தப் பெட்டியில் இல்லை. என்றாலும், அவ்வளவு பணம் கிடைத்தும் தம்பதியருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது ஏமாற்றம்தான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |