இந்தியாவின் அமைதியான கிராமம் குறித்து தெரியுமா? பின்னணியில் உள்ள சோகமான காரணம்
இந்தியாவில் பலரும் அறிந்திடாத அமைதியான கிராமம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அமைதியான கிராமம்
பொதுவாக கிராமம் என்றால் மிகவும் அழகாகவே காட்சியளிக்கும். பசுமை நிறைந்த வயல்வெளிகள், பறவைகள், சிறுவர்களின் விளையாட்டு சத்தம், வயலில் வேலை செய்யும் விவசாயிகளின் பேச்சு என்று ரசிக்கும்படியாகவே இருக்கும்.
ஆனால் நம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஒட்டுமொத்த நபர்களையும் சோகத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஆம் இந்த கிராமத்தில் மனிதர்களின் சத்தமோ, சிரிப்போ எதுவும் கேட்டாமல் ஒருவிதமான அமைதி சூழ்ந்து காணப்படும். அதனால் இந்த கிராமத்திற்கு அமைதிக் கிராமம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்த அமைதியான கிராமத்தின் பெயர் தட்காய். ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மினி காஷ்மீர் என்று அழைக்கப்படும் பதர்வாவிலிருந்து குறித்த கிராமம் 105 கிலோமீற்றர் தொலையில் இருக்கின்றது.
அமைதிக்கு காரணம் என்ன?
இவ்வளவு அழகான கிராமத்திற்குள் மறைந்துள்ள சோகம் நம்மை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் 105 கிராமங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் பிறவிக்குறைபாடுடன் இருக்கின்றனர்.
பேச முடியாத இந்த கிராமத்தில் உள்ள மக்கள் சைகை மூலமாக தான் தொடர்பு கொள்கின்றனர். அண்டை வீட்டாரின் பேச்சு சத்தமோ, பள்ளியின் சத்தமோ, தெருக்களில் விளையாடும் குழந்தைகளின் சத்தமோ எதுவும் கேட்காதாம்.

இவை தலைமுறை தலைமுறையாக தொடரும் விசித்திர பிரச்சனையாக கிராம பெரியவர்கள் கூறும் நிலையில், மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சியில், தலைமுறையாக கடத்தப்படும் மரபணுக் கோளாறு தான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் சாபத்தால் ஏற்பட்டதாக நம்புகின்றனர்.
மேலும் இந்த குறைபாடு குறித்த மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்து இளைஞர்களுக்கு திருமணம் நடப்பது சவாலாக இருப்பதுடன், சொந்த ஊர்களை விட்டு குழந்தைகளுக்காக வேலை வாய்ப்பு தேடி வெளி மாநிலங்களில் குடிபெயர்கின்றனர்.

தட்காய் கிராம மக்களின் பிரச்சனைக்கு இந்திய ராணுவம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதாவது இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள்ஜ் கிராமத்தை தத்தெடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். சிறப்பு கல்வி திட்டங்கள், சைகை மொழியை முறையாக கற்றுக்கொடுத்து பயிற்சி வழங்குதல், சத்தான உணவு, உடை, சுகாதார வசதி என அனைத்தையும் வழங்கி வரும் நிலையில், இந்த அமைதியான கிராமம் தற்போது புதிய நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |