ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கலாம்.. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!
இந்தியாவில் புதிய வகை கொரோனா மாறுபாடான ஒமிக்ரான் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது ஒமிக்ரான். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதனை இந்தியாவுக்குள் பரவ விடாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கொரோனாவை பலரும் அலட்சியமாக பார்க்க தொடங்கி உள்ளனர். கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும். உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் அதிதீவிரமாக பரவி வருகிறது.
இந்தியாவில் பரவவில்லை எனினும் முன்னெச்சசரிக்கையுடன் இருப்பது நல்லது. பரவ தொடங்கினால் அதிக உயிரிழப்பு ஏற்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.