கோஹ்லி சொதப்பும் போது...இவரே இந்திய அணியை காப்பாற்றுகிறார்! பாராட்டி தள்ளிய தேர்வு குழு தலைவர்
இந்திய அணியில் விராட் கோஹ்லி சொதப்பும் நேரங்களில், மற்றொரு வீரர் இந்திய அணியை பல முறை காப்பாற்றியுள்ளதாக தேர்வு குழு தலைமை தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் புகழ்ந்து பாடியுள்ளார்.
உலக டெஸ்ட சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி, வரும் 18-ஆம் திகதி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த இறுதிப் போட்டி பெரும்பாலான முன்னணி வீரர்கள் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தான் வரும் என்று கூறியிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியா சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குழு தலைமை தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியில் விராட் கோஹ்லியை போன்று மற்றொரு வீரரும், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடுவதாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ரஹானே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்றுத் தாழ்வுகளை சந்தித்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை எப்போதுமே நிரூபித்து இருக்கிறார்.
கோஹ்லி எப்போதெல்லாம் ரன் அடிக்கத் தவறுகிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணியில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்திருக்கிறார். எனவே தான் அவருடைய ஏற்றத் தாழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளமால் அவரின் மேல் எந்த ஒரு கடுமையான நடவடிக்கையையும் நாங்கள் எடுக்காமல் உள்ளோம்.
ஒரு வீழ்ச்சிக்குப் பிறகு அதனைப் பொருட்படுத்தாமல் அடுத்த போட்டியில் அற்புதமாக செயல்படும் அவர், கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோஹ்லி இல்லாத இந்திய அணியை ஒரு கேப்டனாகவும் இருந்து அற்புதமாகவும் வழிநடத்தினார் என்பதை நாம் அனைவரும் மறந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.