ராகுல் டிராவிட் என்னும் ஜெண்டில்மேன்! நியாயமான பிட்ச் தயாரித்தவருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் போது இருதரப்புக்கும் சாதகமான பிட்சைத் தயாரித்த குழுவுக்கு ராகுல் டிராவிட் ரூ.35,000 தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று அபாரமான முறையில் டிரா ஆனது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் தன் அறிவிப்பில், “நாங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுகிறோம். ராகுல் திராவிட் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ.35,000 கொடுத்துள்ளார்” என்று அறிவித்தே விட்டது.
இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியை தோற்றவுடன் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் பந்திலிருந்தே பிட்சின் மண் பெயர்ந்து வந்து 3 நாட்களில் முடியும் பிட்சை போட்டார்கள், காரணம் விராட் கோலி, ரவி சாஸ்திரி.
ஆனால் இந்த கான்பூர் டெஸ்ட் போட்டியின் முன்பு இப்படி பிட்ச் வேண்டும் என்று எந்த ஒரு அறிவுறுத்தலும் தனக்கு அணியின் தரப்பிலிருந்து வரவில்லை என்று கூறினார் கிரவுண்ட்ஸ்மென் ஷிவ்குமார்.
இந்நிலையில்தான் ஷிவ்குமார் தலைமை கிரவுண்ட்ஸ்மென் குழுவுக்கு ராகுல் திராவிட் ரூ.35,000 கொடுத்து ஸ்போர்ட்டிங் பிட்சை தயாரிக்கச் சொல்லியிருக்கிறார்.
ஜெண்டில்மேன் என அறியப்படும் டிராவிட் மீண்டும் தனது செயலின் மூலம் அதை நிரூபித்துள்ளார் என்றே கூற வேண்டும்.