எனது அணியில் இவர்களுக்கு மட்டுமே இடம்! மிகத் தெளிவாக கூறிய டிராவிட்: பாராட்டி தள்ளும் ரசிகர்கள்
இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில், இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராகவுள்ள ராகுல் டிராவிட் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணி வரும் ஜுலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் ஷிகார் தாவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை செல்லவுள்ள இந்திய அணிக்கு, ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து டிராவி சில விஷயங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
அதில், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரை இந்திய தேர்வு குழு தேர்வு செய்யும் முன்னர் அவர் உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். உள்ளூர் தொடர்களில் குறைந்தபட்சம் 700 முதல் 800 ரன்கள் அவர் அடிக்கும் பட்சத்தில் அவருக்கு விளையாடும் வாய்ப்பை இந்திய தேர்வு குழு வழங்கும்.
மிக பெரிய கனவுகளோடு இந்திய அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் சென்றால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை நான் இளம் வயதில் உணர்ந்து இருக்கிறேன்.
எனவே முடிந்தவரை அவர்களுக்கு வாய்ப்பை நான் வழங்க முயற்சிப்பேன். மேலும், எனது தலைமையில் விளையாடப் போகும் வீரர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ளும் விஷயம் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வாய்ப்பு வழங்குவேன்.
அதேபோல தொடர் நடக்கும் வேளைகளில் முடிந்தவரை மாற்றங்கள் செய்து அனைத்து வீரர்களையும் நான் விளையாட வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.