ராகுல் காந்தி முக்கிய அறிவிப்பு! குவியும் பாராட்டுக்கள்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்த வரும் நிலையில் பரவலை குறைக்க டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல மாநில அரசுகள் கடும் நடவடிக்கை முன்னெடுத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் தனது பொது பேரணிகளை ரத்து செய்வதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்-பி-யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பெரிய பொது பேரணிகளை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆழமாக சிந்திக்க அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
In view of the Covid situation, I am suspending all my public rallies in West Bengal.
— Rahul Gandhi (@RahulGandhi) April 18, 2021
I would advise all political leaders to think deeply about the consequences of holding large public rallies under the current circumstances.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று ஏப்ரல் 17ம் திகதியுடன் 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது.
ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 என 3 கட்ட தேர்தல் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழலில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி எடுத்துள்ள முடிவை பலர் பாராட்டி வருகின்றனர்.