நட்சத்திர வீரருக்கு கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடக்கும் இலங்கை - இந்தியா போட்டி! அவருக்கு பதில் களமிறங்கும் வீரர் யார்?
இந்திய அணி வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதியானதால் நேற்று ஒத்தி வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான போட்டி இன்று நடைபெறும் நிலையில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெறும் வீரர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெறவிருந்த இரண்டாவது டி20 போட்டி இன்று (28/07/21) ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்தப் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் க்ருனால் பாண்டியவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என்று வந்துள்ளதால் இன்றைய போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் இந்திய அணியில் க்ருனால் பாண்டியவால் விளையாட முடியாது. இதன்காரணமாக 2 ஆவது டி20 போட்டியில் க்ருனால் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாகருக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே 3-வது ஒருநாள் போட்டியின்போது அறிமுகமான ராகுல் சாகர் இலங்கை அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சிறப்பாக பந்துவீசி அவர்களைத் திணறடித்தார்.
இதன் காரணமாக நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி ராகுல் சாஹருடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.