தண்டவாளத்தில் இளம்பெண்! அருகில் ரயில்.. கண் இமைக்கும் நொடியில் காப்பாற்றிய பொலிஸ்! வைரலாகும் வீடியோ
இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய காவலரின் துணிச்சலான செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சமீப காலமாக ரயில் நிலையங்களை கடக்கும் போது பயணிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பலர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி கொள்கின்றனர். அப்படி சிக்கும் பலரை காவலர்கள் சூப்பர் ஹீரோவாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பையில் இது போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள புறநகர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் எதிரே ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
இந்த காட்சியினை முன்பாகவே சிசிடிவியில் பார்த்த காவலர் உடனடியாக ரயில் ஓட்டுனருக்கு சிக்னல் கொடுத்து ரயிலை சரியான நேரத்தில் நிறுத்தி தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
Head Constable Naik @grpmumbai posted at Vasai Road police station displayed exceptional presence of mind and courage in saving a lady commuter who was on the track from death. He waved the motorman to stop the train while running and pulling out the lady. He is being rewarded. pic.twitter.com/t4LYCCd6f0
— Quaiser Khalid IPS (@quaiser_khalid) September 11, 2021
காவலர், அந்த பெண்ணை காப்பாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது. ஆபத்தான காலத்தில் தன்னுடைய புத்தியை சரியாக பயன்படுத்தி பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பலரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.