மின்னல் வேகத்தில் வந்த ரயில்.. தாயிடமிருந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஹீரோவின் பரபரப்பு வீடியோ
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் வந்துக்கொண்டிருந்த தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை தக்க சமயத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்திலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தன் உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் Mayur Shelke-யின் செயலை கண்டு மிகவும் பெருமைப்படுவதாக பாராட்டியுள்ளார்.
அந்த வீடியோவில், தாயின் கையை பிடித்துக்கொண்டு நடைமேடையில் விளிம்பில் நடந்து செல்லும் குழந்தை, திடீரென தவறி தண்டவாளத்தில் விழுகிறது.
அந்த தண்டவாளத்தில் ரயில் வேகமாக வருவதை உணர்ந்த தாய், என் செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் திணறுகிறார். தாய் பார்வையற்றவர் என தெரிகிறது.
ரயிலுக்கு எதிர் திசையிலிருந்து தண்டவாளத்தில் ஓடி வந்த Mayur Shelke, குழந்தையை தூக்கி நடைமேடை மீது தள்ளிவிட்டு, விளிம்பில் தானும் நடைமேடையில் ஏறி தப்புகிறார்.
Very proud of Mayur Shelke, Railwayman from the Vangani Railway Station in Mumbai who has done an exceptionally courageous act, risked his own life & saved a child's life. pic.twitter.com/0lsHkt4v7M
— Piyush Goyal (@PiyushGoyal) April 19, 2021
நொடியில் ரயில் மின்னல் வேகத்தில் அவர்களை கடந்துச்செல்கிறது. தன் உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய Mayur Shelke அனைவரும் பாராட்டி வருகின்றனர்.