பாதியாக குறையும் RAC கட்டணம்? ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
இந்தியாவில் ரயில் கட்டணம் குறைவு என்பதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால், பெரும்பாலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்து விடும்.

பாதியாக குறையும் RAC கட்டணம்?
பொதுவாக விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது RAC என்ற வசதி இருக்கும். ஒரு RAC டிக்கெட் 2 பயணிகளுக்கு ஒதுக்கப்படும்.
ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர், அதனை கேன்சல் செய்யும்போது காத்திருப்பில் உள்ள இருவருக்கு அந்த ஒரு இடம், RAC டிக்கெட்டாக வழங்கப்படும்.

2 பயணிகளுக்கும் பகுதியளவு இருக்கையை இந்த டிக்கெட் உறுதி செய்யும். ஒரு பெர்த்தில் 2 பேர் பயணம் செய்தாலும் இருவரிடமும் முழு கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒரு பெர்த்தில் 2 பேர் பயணம் செய்தாலும், ஏன் 2 பேரிடமும் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், ஒருவருக்கான பெர்த்தை இருவருக்கும் வழங்குவதால், இருவரிடமும் பாதியளவே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை ரயில்வே நிர்வாகம் அமுல்படுத்தினால், RAC கட்டணம் பாதியாக குறையும்.
அதே போல், நாட்டில் 478 அதிவிரைவு ரயில்களில் 123 ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட 55 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக இயக்கப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதற்காக 55 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவான ரயில்களை அதிவிரைவு ரயில்களாக வகைப்படுத்த கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும், அதிவிரைவு ரயில்களுக்கான சராசரி வேகத்தை 100 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |