தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
மேலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையில் 35°C வரை வெப்பம் இருக்கும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34-35°C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |