CSK-அணியில் அடுத்த ஆண்டு கழட்டிவிடப்படும் முக்கிய வீரர்! மறைமுகமாக சொன்ன சீனிவாசன்
சென்னை அணி, வரவிருக்கும் ஏலத்தில் முக்கிய வீரர் ஒருவரை வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடர்பான ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு, 10 அணிகள் விளையாடவுள்ளது.
இதற்காக தற்போது இருக்கும் அணிகள் மூன்று வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு விட வேண்டும். அந்த வகையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், டோனி அடுத்த ஆண்டு அணியில் இருப்பார் என்பதை உறுதி செய்திருந்தார்.
ஆனால், அதே சமயம், அவரிடம் மற்றொரு கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து அவர் எந்த ஒரு பதில் கூறவில்லை, பொதுவாக ரெய்னா இடம் குறித்து தற்போது எந்த ஒரு பதிலும் கூற முடியாது என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.
இதன் மூலம் சென்னை அணி நிச்சயமாக, அடுத்த முறை ரெய்னாவை வெளியில் விட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. ரெய்னாவும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அந்தளவிற்கு ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.