இந்தியாவுக்கு முதல் IPL அணியாக நிவாரண நிதியை அறிவித்த ராஜஸ்தான்! எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக 7.50 கோடி ரூபாயை ராஜஸ்தான் அணி நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
பலி எண்ணிக்கை இரண்டு லட்சமாக உயா்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், வீட்டிற்குள்ளே இருக்கும் மக்களுக்கு ஐபிஎல் போட்டி தான் ஒரு மன நிம்மதியை தருகிறது என்று கூறலாம்.
அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியைச் சோ்ந்த அவுஸ்திரேலியா வீரா் பேட் கம்மின்ஸ், இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக பிரதமா் நிவாரண நிதிக்கு 37 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
Rajasthan Royals announce a contribution of over $1 milion from their owners, players and management to help with immediate support to those impacted by COVID-19. This will be implemented through @RoyalRajasthanF and @britishasiantst.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021
Complete details ?#RoyalsFamily
இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 40 லட்சம் ரூபாய் வழங்குகிறேன் என்று முன்னாள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக 7.50 கோடி ரூபாயை வழங்குவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
முதல் அணியாக ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளதால், இதைத் தொடர்ந்து, மற்ற அணிகள் தங்கள் நிவாரண நிதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.