வருங்காலத்தில் அரசியல்? தனது நிரந்தர முடிவை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கு இல்லை என தனது நிரந்திர முடிவை ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 3ஆம் திகதி அறிவித்தார். ஆனால் பின்னர் அதே மாதத்தின் இறுதியில் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரும் எண்ணத்தை கைவிடுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்னபிறகு மக்கள் மன்றத்தின் பணி மற்றும் நிலை குறித்து ரசிகர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது கடமை.
— Rajinikanth (@rajinikanth) July 12, 2021
கால சூழலால் நாம் நினைத்தது நடக்கவில்லை, வருங்காலத்துல அரசியலில் ஈடுப்பட போகும் எண்ணம் எனக்கில்லை.
ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.