ரஜினியின் தீவிர ரசிகர் திடீர் மரணம்! ரஜினி அஞ்சலி செலுத்த வருகிறாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு முதன்முறையாக ரசிகர் மன்றம் தொடங்கிய முத்துமணி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமான போதே, அவருக்காக “ரஜினி ரசிகர் மன்றத்தை” தொடங்கியவர் முத்துமணி.
அன்றிலிருந்து பல்வேறு நற்பணிகளை செய்து ரஜினியின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார், கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் முத்துமணிக்கு என்றுமே செல்வாக்கு உண்டு.
அவருடைய திருமணத்தை கூட ரஜினிகாந்த் தானே தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார், எந்நேரத்திலும் ரஜினிகாந்தை சென்று சந்திக்கும் அளவுக்கு புகழ்பெற்றவர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் முத்துமணி, இதையறிந்த ரஜினிகாந்த் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதமாக உடல்நலகுறைவால் வீட்டிலே முடங்கிக் கிடந்த முத்துமணி இன்று காலை காலமானார்.
இவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் நிலையில், ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.