மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. நாட்டிலேயே முதல் முறையாக உடலை வெட்டாமல் உடற்கூறாய்வு
டெல்லியில் மெய்நிகர் தடயவியல் ஆய்வு கூடத்தை அமைக்க சுமார் கோடி வரை செலவிடப்பட்டுள்ளது
மெய்நிகர் உடற்கூறாய்வின் சிறப்பு என்னவென்றால், இரவு நேரங்களில் இதனை செய்யும்போது இதன் முடிவுகள் சிறப்பாக இருக்கும்
மறைந்த இந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவத்சவாவிற்கு உடலை வெட்டாமல் மெய்நிகர் உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.
இந்தி திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ராஜூ ஸ்ரீவத்சவா தனது 58வது வயதில் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பல நாட்கள் சுயநினைவில்லாமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் அவரது உயிர் பிரிந்தது.
இந்த நிலையில் அவரது உடல் நவீன வடிவில் மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே முதல் முறையாக ஒருவரின் உடல் இவ்வாறு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் உடலானது வெட்டப்படாமல், சி.டி ஸ்கேன் நுட்பத்தின் மூலம் அனைத்து பகுதிகளையும் காட்டிவிடும். உடலின் அனைத்து பாகங்களையும் மருத்துவர்கள் இதன்மூலம் பார்க்க முடியும்.
மேலும் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை எண்ணற்ற முறையில் மருத்துவர்களால் படிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.