ராம் குமார், கள்ளக்குறிச்சி மாணவி இறப்புகளுக்கு ஒற்றுமை இருக்கு: வழக்கறிஞர் ராமராஜ் சிறப்பு பேட்டி
ராம் குமார்-சுவாதி கொலைக்கும், கள்ளக்குறிச்சி மாணவி இறப்பிற்கும் ஒற்றுமை உள்ளது என வழக்கறிஞர் ராமராஜ் ஐபிசி தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அரசால் மூடிமறைக்கப்பட்ட கொலை, அரச பயங்கரத்தால் தான் இந்த கொலை செய்யப்பட்டது என்ற புள்ளியை மாநில மனித உரிமை ஆணையம் கொடுத்துள்ளது.
ஏனென்றால் ராம் குமாரின் இறப்பு சாமானியம் அல்ல, ராம் குமாரின் இறப்பிற்கு பிறகு அவரது குடும்பத்தை முற்றிலுமாக கொலைகாரனின் குடும்பம் என்றே சமூகம் நிலைப்படுத்துகிறது, மேலும் ராம் குமார் இந்த சமூகத்தை சேர்ந்தவர், அதனால் அந்த சமூகமே கொலை பண்பு கொண்ட சமூகமாகவே கருதுகிறார்கள்.
அரசு உண்மைகளை மறைத்து, பொய்களை விற்று வியாபாரம் செய்து வருகிறது, உதாரணமாக வீரப்பனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, காட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பிடித்தாக தெரிவித்து வருகிறது.
இது போன்று ராம்குமார்-சுவாதி கொலை வழக்கில் மனித உரிமை ஆணையம் வழங்கிய மூன்று பரிந்துரைகள் முதல் கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறப்பு வரை வழக்கறிஞர் ராமராஜ் ஐபிசி தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டியின் முழு வீடியோ தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.