ரேஞ்ச் ரோவரின் முதல் முழுமையான மின்சார கார் அறிமுகம்
Range Rover debuts first electric SUV: ரேஞ்ச் ரோவர் தனது முதல் முழு மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரேஞ்ச் ரோவர் மின்சார கார்
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரேஞ்ச் ரோவர், தனது முதல் முழுமையான மின்சார மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய Range Rover Electric மாடல், இங்கிலாந்தின் Solihull தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10,500 பணியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்காக புதிதாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும், Wolverhampton Electric Propulsion Centre-இல் பேட்டரி மற்றும் மின்சார இயக்கக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.
REVEALED: The First-Ever All-Electric Range Rover! ⚡
— carwow (@carwowuk) September 1, 2026
Range Rover has officially ushered in a new era, revealing its first-ever all-electric flagship luxury SUV!
⚡️Dual-motor with 542hp & 850 Nm!
🚀 0–60 mph in 4.3 seconds!
🔋 Up to 372 miles of range!
🔌 0–80% in just 22… pic.twitter.com/cEI6l6YpyF
இந்த வாகனம் 118kWh பேட்டரி கொண்டது. ஒரே சார்ஜில் 530 கி.மீ. வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 350kW DC fast charging வசதி மூலம் மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக், Mercedes-Maybach EQS மற்றும் Lotus Eletre போன்ற சொகுசு மின்சார SUV-களுடன் போட்டியிடும். 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் கடந்த ஆண்டு சைபர் தாக்குதல் மற்றும் சப்ளை சேன் சிக்கல்கள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்த மாடல் அறிமுகம் ஒரு வருடம் தாமதமானது. இருப்பினும், புதிய மின்சார மாடல், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
ரேஞ்ச் ரோவர் மேலாளர் Martin Limpert கூறியதாவது: “இது பத்து ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி மற்றும் பொறியியல் முயற்சியின் விளைவு. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்” என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |