150 ஆண்டுகளில் பிரித்தானியாவில் முதன்முறையாக தென்பட்ட அபூர்வ பறவை
பிரித்தானியாவில் 150 ஆண்டுகளில் முதன்முறையாக அபூர்வ பறவையினமான எகிப்திய பிணந்தின்னிக் கழுகு ஒன்று கண்களில் சிக்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே காணக்கிடைக்கும் அபூர்வக் காட்சி என அதை வர்ணிக்கிறார்கள் பறவை ஆர்வலர்கள்.
இந்த கழுகு வடக்கு பிரான்சிலிருந்து பிரித்தானியாவின் Isles of Scilly என்னும் தீவுகளுக்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த மிக அபூர்வமான கழுகு ஒரு வனப்பறவையாக இருக்கும் பட்சத்தில், அது 1868க்குப் பிறகு காணக்கிடைக்கும் முதல் காட்சியாக இருக்கலாம் என்கிறார் Exeter பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் துறை பேராசிரியரான Stuart Bearhop என்பவர்.
இதற்கு முன் இந்த அபூர்வ கழுகு 1825ஆம் ஆண்டு ஒரு முறையும், 1868ஆம் ஆண்டு ஒரு முறையும்தான் கண்களில் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.