டோனி, கோஹ்லி, ஏ.பி.டிவில்லியர்ஸ்! மூவரைப் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொல்லி அசத்திய ரசீத்கான்
ஆப்கானிஸ்தான் அணியின் துணை கேப்டன் ஆன ரசீத்கான், ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த இன்ஸ்டா பதிவு சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான ரஷீத்கான், அவ்வப்போது தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவார்.
அந்த வகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர், ரசீத்கானிடம், இந்திய அணியின் முன்னாள் வீரர் டோனி, தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லி, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் குறித்து ஒரே வார்த்தையில் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு ரஷீத்கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டோனியை ஒரே வார்த்தையில் கூறி முடிக்க முடியாது. கோஹ்லி ஒரு ராஜா, யுவராஜ் சிங் சிக்ஸர்களின் அரசன், டிவில்லியர்ஸ் உண்மையில் ஒரு 360 டிகிரி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.