குடியுரிமையுடன் இந்தியாவிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பு - ரஷீத் கான் சொன்ன பதில்
இந்திய குடியுரிமையுடன் இந்தியாவிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பை ரஷீத் கான் நிராகரித்துள்ளார்.
ரஷீத் கான்
ஆப்கானிஸ்தான் T20 அணியின் அணித்தலைவராக உள்ளவர் ரஷீத் கான். சுழற்பந்து வீச்சாளரான இவர், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 210 விக்கெட்களும், 517 T20 போட்டிகளில் விளையாடி 699 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமையுடன் அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
Rashid Khan: From Streets to Stardom என்ற தனது சுயசரிதை புத்தகத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்காக விளையாட வாய்ப்பு
இதில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து குடியுரிமையுடன் அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நான் என் சொந்த நாட்டுக்காக மட்டுமே விளையாடுவேன். அப்படி இல்லையென்றால் வேற எந்த நாட்டுக்கும் விளையாட மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2023 ஐபிஎல் தொடரின் போது பிசிசிஐயை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர், "உங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு வந்து தங்குங்கள். நாங்கள் உங்களுக்கு இந்திய ஆவணங்களைத் தருகிறோம், இங்கே வசித்து, இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுங்கள்" என்றார்.
"அவர் சொன்னதைக் கேட்டு நான் திகைத்துப்போனேன், எப்படிப் பதிலளிப்பது என்றும் எனக்குத் தெரியவில்லை. மிக்க நன்றி. நான் என் நாடான ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுகிறேன் என்று கூறினேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2018 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

X தளத்தில், அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சிவராஜை மென்சன் செய்து வைக்கப்பட்ட கோரிக்கையில், “உங்கள் ட்வீட்கள் அனைத்தையும் பார்த்தேன். ஆனால், குடியுரிமை தொடர்பான விஷயங்களை உள்துறை அமைச்சகம்தான் கையாளுகிறது” என பதிலளித்தார்.
அதற்கு, "ரஷீத் ஒரு தேசியப் பெருமைக்குரிய விஷயம் என்றும், அவர் மற்றொரு நாட்டிற்கு வழங்கப்பட மாட்டார்" என அப்போதைய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி எதிர்வினையாற்றினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |