ரத்தன் டாடாவின் நிறுவனம் ஒன்றில் ரூ 26.5 கோடி சம்பளத்தில் பணியாற்றும் திருச்சி தமிழர்... யாரிவர்
ரத்தன் டாடாவின் TCS நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருப்பவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்த கீர்த்திவாசன் என்பவரே.
சம்பளம் 4.6 சதவீதம் அதிகரிப்பு
இவர் மார்ச் 2025 இல் முடிவடைந்த நிதியாண்டில் மொத்தம் ரூ 26.52 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். 2025 நிதியாண்டில் அவரது அடிப்படை சம்பளம் ரூ.1.27 கோடியிலிருந்து ரூ.1.39 கோடியாக உயர்ந்துள்ளது.
கீர்த்திவாசன் ஜூன் 2023 முதல் ஐடி பிரிவை வழிநடத்தி வருகிறார். முந்தைய ஆண்டை விட அவரது சம்பளம் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கீர்த்திவாசன் அடிப்படை சம்பளமாக ரூ.1.39 கோடியும், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் என ரூ.2.12 கோடியும்,
கமிஷனாக ரூ.23 கோடியும் பெறுகிறார். TCS ஊழியர்களின் சராசரி ஊதியத்துடன் ஒப்பிடுகையில் அவரது ஊதிய விகிதம் 329.8 சதவீதமாகும். இருப்பினும், போட்டி ஐடி நிறுவனங்களின் சகாக்களை விட கீர்த்திவாசனின் சம்பளம் குறைவாகவே உள்ளது.
மே 28 ஆம் திகதி நிலவரப்படி, TCS இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாகும், இதன் சந்தை மதிப்பு ரூ12.66 லட்சம் கோடி. 2025 நிதியாண்டில் சராசரி ஊழியர் ஊதியம் 6.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது, இந்தியாவில் சராசரி ஆண்டு ஊதிய உயர்வு 4.5 முதல் 7 சதவீதம் வரை உள்ளது.
35 ஆண்டுகளுக்கும் மேலான
திருச்சியில் பிறந்த கீர்த்திவாசன் கடந்த 1989ல் TCS நிறுவனத்தில் இணைந்து மின் வணிக விநியோகம் உட்பட பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2023 ஜூன் 1ம் திகதி முதல் TCS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
தொழில்நுட்பத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், CEO பதவியை அடைவதற்கு முன்பு நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
கீர்த்திவாசனின் தலைமையின் கீழ் TCS நிறுவனம் 2024ல் 2 பில்லியன் அமெரிக்க டொலர் பிராண்ட் மதிப்பை எட்டியது. இதனால், உலகளவில் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க ஐடி சேவை பிராண்டாக TCS மாறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |