தித்திக்கும் சுவையில் ரவை பாயாசம்.., இலகுவாக செய்வது எப்படி?
பாயாசம் என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் ரவை பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- பாதாம்- 10
- ரவை- 2 ஸ்பூன்
- பால்- 2 கப்
- தண்ணீர்- 1 கப்
- கஸ்டர்ட் பவுடர்- 1 ஸ்பூன்
- குங்குமப்பூ- 5 இதழ்
- சர்க்கரை- 3 ஸ்பூன்
- கண்டென்ஸ்டு மில்க்- 2 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நறுக்கிய முந்திரி பாதாமை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் அதில் ரவை சேர்த்து வறுத்து பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் கஸ்டர்ட் பவுடர், குங்குமப்பூ மற்றும் பால் சேர்த்து கரைத்து கொதிக்கின்ற பாலில் ஊற்றவும்.
இதற்கடுத்து நினைக்க கொதித்து கெட்டியாகி வந்ததும் அதில் சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ரவை பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |