இந்தியா - நியூசிலாந்து தொடர்! வித்தியாசமான சாதனையை தொடர்ந்து செய்யும் தமிழக வீரர் அஸ்வின்... இது நிஜமாவே கெத்து தான்
இந்திய அணியை சேர்ந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வித்தியாசமான சாதனையை தொடர்ந்து தக்க வைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் பந்துவீசியதன் மூலம் அஸ்வின் ஒரு வித்தியாசமான சாதனையை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
அதன்படி இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 உலகக்கோப்பை மூலம், 4 வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
அந்த உலகக்கோப்பை முதல் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிவரை வலது கை பேட்ஸ்மேன்களுக்கு 59 பந்துகள் வீசி, ஒரு பவுண்டரியைக் கூட அடிக்கவிடவில்லை.
அதே போல நேற்றைய இரண்டாவது டி20 போட்டியிலும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 13 பந்துகள் வீசி ஒரு பவுண்டரியை கூட அடிக்கவிடாமல் தடுத்து கெத்து காட்டினார்.
இது ஒரு வித்தியாசமான சாதனையாகவே பார்க்கப்படுகிறது.