இந்திய அணி இவர் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி விளையாடக் கூடாது! எச்சரிக்கும் வார்னர்
அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆடக்காரரான டேவிட் வார்னர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பேசியுள்ளார்
. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த போட்டி குறித்து பிரபலங்கள் மற்றும் வீரரகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன் படி அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர், இங்கிலாந்து மைதானங்களில் ரவீந்திர ஜடேஜா மிக சிறப்பாக செயல்படும் ஒரு வீரர். இதற்கு முன் அங்கு விளையாடி அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
அடிப்படையில் அவர் ஒரு ஆல்ரவுண்டர். எனவே அவரை இறுதிப்போட்டியில் விளையாட வைப்பதன் மூலம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் பலப்படும். அதே சமயத்தில் அவர் ஒரு மிகச்சிறந்த பீல்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே நிச்சயமாக அவர் இறுதிப் போட்டியில் விளையாடினார் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.