19-வது ஓவரில் நான் இதை நினைத்தேன்! அதே போன்று வந்தது: வெற்றிக்கு பின் பேசிய ரவீந்திர ஜடேஜா
கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றிக்கு பின், சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம், சென்னை அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தான், 8 பந்துகள் சந்தித்த இவர் 22 ஓட்டங்கள் குவித்தார்.
அதில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுணடரி அடங்கும். அந்த 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுமே, 19-வது ஓவரில் தான் பறந்தது. இந்த ஓவரில் மட்டும் 22 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவுக்கு மேன் ஆப் தி மேட்ச் கொடுக்கப்பட்டது.
— Cric Zoom (@cric_zoom) September 26, 2021
இதன் பின் பேசிய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பின்பு, நீங்கள் வெள்ளை நிற பந்துக்கு திரும்புவது மிகவும் கடினம்.
அதாவது டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும், அதே சயம் டி20 போட்டிகளில் வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்படும். அதற்கு ஏற்ற வகையில் என்னை தயார் செய்து கொண்டேன், இந்த போட்டியில் பேட்டை நான் நன்றாக ஸ்விங் செய்தேன்.
துவக்கத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டூபிளிசிஸ் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். பேடிங்கோ அல்லது பவுலிங்கோ, நீங்கள் எதுவாக இருந்தாலும், அதை கூட்டாக செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
அவர் பைன் லெக் மற்றும் ஸ்குயர் லெக் அப் வீசினார். இதை மனதில் வைத்தே அவர் எப்படியும் வெளியே பந்து வீசுவார் என்றே நினைத்ஹ்டேன், அதிலும் அது ஷார்ட் பாலாக மெதுவாக வந்தது.
இதை நான் என் அதிர்ஷ்டம் என்றே கூறுவேன் என கூறியுள்ளார்.