டோனி நிச்சயம் இதை ஒரு போட்டியில் செய்ய வேண்டும்! ரவீந்திய ஜடேஜாவின் ஆசை: வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முன்னாள் வீரர் டோனிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்டுள்ள, இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை அல்லது இங்கிலாந்து என இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. அதில், ரவீந்திர ஜடேஜா சதமோ அல்லது வெற்றியோ பெற்றால் அதை கொண்டாடும் விதமாக வாழ் சுழற்சியை செய்து காட்டுவார்.
அதை டோனி தனது கையினால் செய்வது போல் அந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோவைக் கண்ட ரவீந்திர ஜடேஜா டோனி நிச்சயமாக இந்த செய்கையை பேட் மூலம் ஒரு போட்டியில் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் இந்த ஆசையை டோனி நிறைவேற்றுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.