பயிற்சியாளராக தொடர விருப்பமில்லை? விலகும் ரவிசாஸ்திரி: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் பயிற்ச்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி அதன் பின் ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவரின் பதவிக்காலம் இந்த ஆண்டின் இறுதியோடு முடிவடையவுள்ளதால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என்றும், தன்னுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
அதற்குள் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும், அதே சமயம் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர.ஸ்ரீதர் ஆகியோரின் ஒப்பந்தங்களும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லையாம்.
அதே சமயம் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோ நீட்டிக்கப்படுவார் என்று பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளனர். மேலும், டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியாவின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிப்பது குறித்த விவாதங்கள் பிசிசிஐ-யில் சென்று கொண்டு தான் இருக்கிறது.
அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்க்கப்பட்டு வருகிறது. அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்காணல் செய்யப்படும். இந்த பயிற்சியாளர் களத்தில் சேவாக் மற்றும் டிராவிட்டின் பெயர்கள் அடிபடுகின்றனர்.
ஆனால், சேவாக்கிற்கு அந்தளவு அனுபவம் இல்லாத காரணத்தினால், டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக உள்ளதால், அவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பிசிசிஐ தலைவர் கங்குலி, சமீபத்தில் டிராவிட்டிடம் இதைப் பற்றி பேசவேயில்லை என்று கூறியிருக்கிறார்.
இதனால் டி20 உலகக்கோப்பை முடிவுக்கு பின், நிச்சயமாக இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் விஷயத்தில் மாற்றம் இருக்கும், ரவிசாஸ்திரிக்கும் தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க விருப்பமில்லாத காரணத்தினால், யார் தான் இந்தியாவின் புதிய பயிற்சியாளர் என்பது டி20 உலகக்கோப்பைக்கு பின் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.