ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
இடைத்தேர்தலில், சிறிய கட்சி ஒன்றிடம் மோசமாக தோல்வியடைந்துள்ளது பிரித்தானிய ஆளுங்கட்சியான லேபர் கட்சி.
ஆளுங்கட்சிக்கு மரண அடி
Gorton and Denton தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில், 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை, நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இருக்கையை மட்டுமே வைத்திருந்த சிறிய கட்சியான கிரீன்ஸ் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளது ஆளுங்கட்சி.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி வேட்பாளரான Angeliki Stogiaக்கு வெறும் 9,364 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், கிரீன் கட்சி வேட்பாளரான Hannah Spencerக்கு 40.7 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.
பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
லேபர் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் பிரித்தானிய பிரதமருமான கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என துணை பிரதமர் பதவி வகித்தவரான ஏஞ்சலா ரெய்னரே வலியுறுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இதுவரை, எதிர்க்கட்சியினரும், ஸ்டார்மர் கட்சியைச் சேர்ந்த சிலரும் பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்திவந்த நிலையில், தற்போது அவரது கட்சியைச் சேர்ந்தவரும், துணை பிரதமர் பதவி வகித்தவரான ஏஞ்சலா ரெய்னரே தற்போது பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த இடைத்தேர்தல் தோல்வி ஒரு எச்சரிக்கை என்று கூறியுள்ள ஏஞ்சலா, வாக்காளர்களுக்கு நாம் உறுதியளித்த மாற்றம் இப்போது அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆக, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தலைமை மாறவேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார் ஏஞ்சலா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |