RCB அணிக்கு புதிய உரிமையாளராக உள்ள நபர் யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் வைத்துள்ள அணிகளில் ஒன்றாக RCB அணி விளங்கி வருகிறது.
RCB அணிக்கு புதிய உரிமையாளர்
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், 18 வருடங்களில் முதல்முறையாக 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது.
இதன் காரணமாக, அணியின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி, RCB அணி விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
There have been a lot of rumour about the sale of an @IPL franchise specifically @RCBTweets - well in the past they have been denied. But it seems the owners have finally decided to take it off their balance sheet and sell it. I am sure having won the IPL last season and also… pic.twitter.com/ecXfU5n5v5
— Lalit Kumar Modi (@LalitKModi) September 29, 2025
2008 ஆம் ஆண்டில் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் RCB அணியை 111.60 மில்லியன் டொலருக்கு வாங்கியது.
இதனையடுத்து 2016 ஆம் ஆண்டில், லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம், தற்போது RCB அணியின் உரிமையாளராக உள்ளது.
இந்நிலையில், RCB அணியை வாங்க இந்தியாவின் புனேவை தளமாக கொண்டு இயங்கி வரும் Serum institute நிறுவனத்தின் நிறுவன CEO அதார் பூனாவாலா பேச்சுவார்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |