ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB! முதல் குவாலிபையரில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி
ஐபிஎல்-லின் முதல் குவாலிபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தடுமாறிய பஞ்சாப் கிங்ஸ்
முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த முக்கியமான ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற RCB அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்னிங்ஸை ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் தொடங்கினர்.
இருவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர்களால் அதை இந்த ஆட்டத்தில் நிறைவேற்ற முடியவில்லை.
இதனால் இரண்டாவது ஓவரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
ப்ரியன்ஷ் 7 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ஓட்டங்களையும், ஜாஸ் இங்கிலிஸ் 4 ஓட்டங்களையும் மட்டுமே எடுத்தனர்.
நேஹல் வதேரா (8), ஷஷாங் சிங் (3), முஷீர் கான் (0) போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (26) மற்றும் ஓமர்சாய் (18) ஓரளவுக்குப் போராடினாலும், ஒரு சவாலான ஸ்கோரை எட்ட அது போதுமானதாக இல்லை.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 14.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இறுதிப்போட்டியில் RCB
வெற்றிக்கு 102 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர் ஃபில் சால்ட் அதிரடியாக விளையாடி, வெறும் 27 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.
விராட் கோலி 12 ஓட்டங்களில் ஜோஷ் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாலும், மயங்க் அகர்வால் (19 ஓட்டங்கள்) மற்றும் ரஜத் பட்டிதார் (15 ஓட்டங்கள்) குவித்து வெற்றியை உறுதி செய்தனர்.
வெறும் 10 ஓவர்களிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி இந்த போட்டியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |