பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை
RCB வெற்றி கொண்டாட கூட்ட நெரிசலில் உயிரிழப்பிற்கு RCB அணியின் எக்ஸ் பதிவும் காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
RCB கொண்டாட்டத்தில் உயிரிழப்பு
18 வருட ஐபிஎல் வரலாற்றில், முதல்முறையாக RCB அணி கோப்பையை வென்றதால், நாடு முழுவதும் RCB ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில், RCB வெற்றி கொண்டாட்டத்தின் போது, பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் மறைவிற்கு, பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின், குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காயமடைந்தவர்களை மாநில முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
RCB அணியின் எக்ஸ் பதிவு
முன்னதாக, திறந்த வெளி பேருந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என பாதுகாப்பு காரணத்தால் காவல்துறை காலையிலே அனுமதி வழங்க மறுத்தது.
அதற்கு மாறாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், RCB அணி தனது எக்ஸ் பக்கத்தில், மாலை 3;14 மணியளவில் கூட கர்நாடக சட்டமன்றத்தில் இருந்து சின்னசாமி மைதானம் வரை வாகன பேரணி நடைபெறும் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தது பதிவு வெளியிட்டது.
🚨 RCB Victory Parade: Today at 5 pm IST. ‼️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 4, 2025
Victory Parade will be followed by celebrations at the Chinnaswamy stadium.
We request all fans to follow guidelines set by police and other authorities, so that everyone can enjoy the roadshow peacefully.
Free passes (limited… pic.twitter.com/raJMXlop5O
இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் RCB வீரர்களை காண கர்நாடக சட்டமன்றம் அருகே பெருமளவில் குவிந்தனர்.
ஆனால், வீரர்கள் யாரும் திறந்த வெளி வாகனத்தில் வராமல், பேருந்தின் உள்ளே அமர்ந்து வந்ததால், வீரர்களை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற நோக்கில், மைதானம் நோக்கி ரசிகர்கள் விரைந்தனர்.
ஒருவேளை திறந்தவெளி பேருந்து பேரணி நடத்தப்பட்டிருந்தால், ரசிகர்கள் சாலையின் ஓரம் நின்று வீரர்களை பார்த்து விட்டு கலைந்து சென்றிருக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், வெறும், 40,000 பேர் அமரும் வகையில் உள்ள சின்னசாமி மைதானத்தின் வெளியே 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்தனர்.
பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முறையற்ற திட்டமிடல்
கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்ததில், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மூச்சுத்திணறல் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர். ரசிகர்கள் கூட்ட நெரிசலில் தள்ளாடி கீழே விழுந்தனர்.
இதில், 11 பேர் உயிரிழந்து வெற்றி கொண்டாட்டம் பெரும் சோக நிகழ்வாக மாறியது.
அவசரகதியில், எந்த முறையான திட்டமிடலும் இல்லாமல் மறுநாளே வெற்றிகொண்டாட்டம் நடத்தியதே உயிரிழப்பு காரணம் என RCB அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.
ஹேசல்வுட் போன்ற வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக நாடு திரும்பும் சூழல் இருந்ததால், மறுநாளே வெற்றியை கொண்டாட RCB அணி நிர்வாகம் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
முறையான திட்டமிடலுடன், வார இறுதிநாட்களில் இந்த நிகழ்வுகளை நடத்தி இருந்தால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |