வீட்டில் செல்போன் பார்த்த கோடீஸ்வரர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! அதிர்வலை சம்பவத்தில் முக்கிய திருப்பம்

Police spokesman Tamil nadu
By Raju May 25, 2022 06:49 AM GMT
Report

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய கோடீஸ்வர தொழிலதிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் முகமது நிஜாம் (52), ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பீவி இவர்களுக்கு ராஜாமுகமது, சேக் அப்துல்காதர், பர்கானா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

மகள் பர்கானாவிற்கு திருமணமான நிலையில் மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வந்துள்ளனர். முகமது நிஜாம் மற்றும் அவரது மனைவி ஆயிஷா பீவி இருவரும் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ந் திகதி இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசவில் தொழுகையை முடித்துவிட்டு, வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து முகமது நிஜாம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் முகமது நிஜாமின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர்.

வீட்டில் செல்போன் பார்த்த கோடீஸ்வரர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! அதிர்வலை சம்பவத்தில் முக்கிய திருப்பம் | Real Estate Owner Murder Case Arrest

இதில் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, இரத்தக்கரையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர்.

உயிர் பயத்திலிருந்த ஆயிஷாபீவி பீரோ சாவியை கொடுத்துள்ளார். சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 170 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கை கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவி மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்து பார்த்த உறவினர்கள் முகமது நிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டிற்குள் கட்டிக்கிடந்த ஆயிஷாபீவியை காப்பாற்றியுள்ளனர்.

வீட்டில் செல்போன் பார்த்த கோடீஸ்வரர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! அதிர்வலை சம்பவத்தில் முக்கிய திருப்பம் | Real Estate Owner Murder Case Arrest

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்தீபன் சம்பவ இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்க உத்தரவிட்டார். டி.எஸ்.பிகள் மனோகரன், அருள்மொழி அரசு, சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி சரவணசுந்தர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்துவிட்டு 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தனிப்படை பொலிசார் தொடர்ந்து நடத்திய புலன் விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். பொலிசார் அவர்களிடம் இருந்து 62 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், செல்போன்கள், கத்தி, கையுறைகளை கைப்பற்றியுள்ளனர். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

வீட்டில் செல்போன் பார்த்த கோடீஸ்வரர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! அதிர்வலை சம்பவத்தில் முக்கிய திருப்பம் | Real Estate Owner Murder Case Arrest

சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கொலையாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். சிலர் மட்டுமே இந்த கொலை வழக்கில் ஈடுபட்டிருக்கலாம் என நினைக்கப்பட்ட நிலையில் இவ்வளவு பேர் சம்மந்தப்பட்டிருப்பது திருப்பமாக உள்ளது.

மேலும் இந்த வழக்கில் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. தொழில் அதிபரை கொலை செய்த கொலையாளிகள் 3 பேர் யார்? என்பதை தற்போது கூற முடியாது. இதேபோல் இந்த கொலை எதற்காக நடந்தது என்பதையும் தற்போது கூற இயலாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் செல்போன் பார்த்த கோடீஸ்வரர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! அதிர்வலை சம்பவத்தில் முக்கிய திருப்பம் | Real Estate Owner Murder Case Arrest

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US