விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டதற்கான காரணம் இதுதான்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட்டது குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
சர்க்கரை அளவு அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட்டது.
தற்போது இதற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், 'சர்க்கரை நோயை பொறுத்தவரை ரத்தக்குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மிக முக்கியமாக கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோய் மூலம் பாதிப்பு ஏற்படும். நீரிழிவு நோயை நாம் கட்டுக்குள் வைத்திருக்காவிடில் பாத நோய்கள், ரத்த நாளங்களில் வரக்கூடிய பாதிப்புகளால் பாதத்தின் தசைகள் அழிய ஆரம்பிக்கும்.
அதுபோன்ற சமயங்களில் சிலருக்கு தோல் அல்லது நகம் அல்லது விரல் பாதிக்கலாம். சிலருக்கு முழுவதுமாக கால் பாதிக்கப்படலாம். எனவே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் இந்த பாதிப்புகள் வருவது மிக மிக குறைவு. விஜயகாந்த் நோயை கட்டுக்குள் வைத்திருக்காமல் இருந்திருக்கலாம்.
இந்த நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படாது. அதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே திசுக்களுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடைபடாமல் இருக்கும்.
மேலும், ரத்த ஓட்டம் சீராக இல்லை என்ற நிலையில் தொற்று ஏற்படும் போது பாதிப்பு அதிகமாகும். நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை தொற்று எளிதில் வந்துவிடும். தொற்றானது மீண்டும் ரத்தத்தில் பரவி, உடல் முழுவதும் செல்லாமல் இருக்க அந்த உறுப்பை எடுக்க வேண்டியிருக்கும்.
இதுதான் விஜயகாந்திற்கு நடந்தது என நினைக்கிறேன். நீரிழிவு நோயாளிகள் முறையான மருத்துவம், சரியான வாழ்வியல் மாற்றம், நிறைவான உணவு முறை இது மூன்றையும் சரியாக கடைபிடித்தால், இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்! சர்க்கரை நோயாளிகளின் முக்கிய கவனத்திற்கு