விற்பனைக்கு வரும் RCB அணி? விலை என்ன? - பின்னணியில் இப்படி ஒரு காரணம்
RCB அணியை விற்க டியாஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில், அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக RCB அணி விளங்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிக பின்பற்றுவோரை கொண்ட அணிகளில் ஒன்றாக RCB உள்ளது.
RCB அணி விற்பனைக்கா?
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வரும் நிலையில், 17 வருடங்கள் கழித்து, முதல் முறையாக RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து RCB அணியின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது அதன் மதிப்பு 2 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.16,834 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி
இந்நிலையில், RCB அணியின் உரிமையாளரான Diageo, 2 பில்லியன் டொலருக்கு அதனை விற்கும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RCB அணியை மொத்தமாகவே அல்லது குறிப்பிட்ட பங்குகளையோ விற்க Diageo முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பெரும் பணக்காரர்களுடன் Diageo நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அதனை 111.60 மில்லியன் டொலருக்கு வாங்கியது.
அதன் பின்னர் கடனில் மூழ்கிய விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம் வாங்கியது.
என்ன காரணம்?
மதுபான உற்பத்தி நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், மதுபான தயாரிப்பில் உலக அளவில் 2வது பெரிய நிறுவனமாக உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில், மது மற்றும் புகையிலை பிராண்டுகளின் விளம்பரங்களை, மறைமுக விளம்பரங்கள் தடை செய்ய இந்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுவும் விற்கும் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
RCB அணியை வாங்குவதற்குப் பின்னால் உள்ள ஒரே நோக்கம் தனது மதுபான பிராண்டான ராயல் சேலஞ்சை விளம்பரப்படுத்துவதாகும். அதற்குப் பின்னால் எந்த கிரிக்கெட் காதலும் இல்லை என சமீபத்தில் RCB அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறி இருந்தார்.
RCB அணியின் வெற்றி பேரணியில், 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், IPL தொடர் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருவதால், பெரும் பணக்காரர்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |