சிகப்பு அரிசி சாதத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின் மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது.
எத்தனையோ நெல் ரகங்களை விளைவித்திருக்கிறார்கள் நம் முன்னோர். அவற்றில் முக்கியமானது சிகப்பு அரிசி. இதை, `தீட்டப்படாத அரிசி’, `முழு அரிசி’ என்றும் சொல்வார்கள். அந்தத் தங்கத்தைவிட்டுவிட்டு, வெள்ளை அரிசி என்கிற கவரிங்குக்குப் பின்னால் நாம் அலைந்துகொண்டிருக்கிறோம்.
சிகப்பு அரிசியில் வடிக்கும் சாதத்தை சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு அது உத்தரவாதம்!
இதயம் காக்கும்
நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது.
இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும், இதன் மூலம் மாரடைப்புக்கு குட் பை சொல்லலாம். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைப்பதி, பக்கவாதம் வராமல் தடுப்பதில், பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காப்பதில் இதன் பங்கு மிகப்பெரியது.
கொழுப்பு
முழுமையான சிகப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
டைப் 2 சர்க்கரை நோய்
சிகப்பு அரிசியில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில்! இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது.