நுரையீரலில் அதிகப்படியான சளி உருவாவதைக் குறைக்கனுமா? இந்த மூலிகை பானத்தை தினமும் குடிங்க
இன்று பலரது நுரையீரலில் சளி அதிகம் தேங்கியுள்ளது. இப்படி சளி வெளியேறாமல் நுரையீரலிலேயே தங்கியிருந்தால், இருமலால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
அதே சமயம் அதிகப்படியான சளித் தேக்கம் உடலின் நோயெதிர்ப்பு திறனை எவ்வாறு குறைக்கும் . எனவே ஆரம்பத்திலே இவற்றை சரி செய்வது நல்லது.
உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக சளியின்றி வைத்திருக்க நினைத்தால், உங்கள் உணவில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பானத்தை சேர்த்து வாருங்கள்.
அந்தவகையில் தற்போது அந்த மூலிகை பானத்தை எப்படி தயாரிக்கலாம்? இதனை கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
- பட்டை - 1 சிறிய துண்டு
- துளசி இலைகள் - சிறிது
- கற்பூரவள்ளி இலை - சிறிது
- மிளகு - 3
- ஏலக்காய் - 2
- சோம்பு - 1/4 டீஸ்பூன்
- ஓமம் - 1 சிட்டிகை
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்ற வேண்டும்.
பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நீர் பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, தேநீரை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்துக் கொண்டால், டீ தயார்.
- இந்த மூலிகை டீயை தினமும் இரண்டு வேளை குடிப்பது நல்லது. அதுவும் இந்த டீயை பிராணயாமம் மற்றும் மூச்சு பயிற்சியை செய்து முடித்த பின் குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
- முக்கியமாக ஒருமுறை டீ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு இரண்டு முறை டீ தயாரிக்கலாம்.
பெறும் நன்மைகள் என்ன?
-
இஞ்சி, பட்டை, துளசி, மிளகு, சோம்பு, சீரகம் மற்றும் ஓமம் போன்ற அனைத்திலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.
-
இவ்வளவு பண்புகளை உள்ளடக்கிய பொருட்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் இரண்டு வேளை குடிப்பதால், அது நோய் மற்றும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்க உதவும்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த மூலிகை டீயைக் குடித்து வந்தால், இந்த டீயில் உள்ள மருத்துவ பண்புகள் கொரோனாவால் நுரையீரலில் அதிகப்படியான சளி உருவாவதைக் குறைக்க உதவுவதோடு, விரைவில் கொரோனாவில் இருந்து மீளவும் உதவும்.
குறிப்பு
கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குடிக்கக்கூடாது.
ஏனெனில், இந்த பானத்தில் ஏராளமான மசாலாப் பொருட்கள் இருப்பதால், அனைத்தையும் ஒரே நேரத்தில் எடுப்பது பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
முக்கியமாக இந்த மூலிகை டீ குடித்தால், நாள் முழுவதும் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலும் சுத்தமாக இருக்கும்.