வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம்
பிரித்தானியாவின் ரீஃபார்ம் யூகே கட்சி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளது.
பிரித்தானியாவின் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான ரீஃபார்ம் யூகே கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள்...
ரீஃபார்ம் யூகே கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் கூறும்போது, வெளிநாட்டவர்களின் நலனுக்காக பணம் கொடுக்க பிரித்தானிய பணியாளர்களை கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

ஆகவே, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் யூகே கட்சி.
அக்கட்சியின் திட்டப்படி, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வீட்டுக்கான உதவி, ஓய்வூதியம் தொடர்பிலான உதவி, வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் நிதியுதவி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவி மற்றும் உடற்குறைபாடுகள் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் என அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும்.
முக்கிய விடயம் என்னவென்றால், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் கட்சி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |