லட்சக்கணக்கான பிரித்தானிய மக்களின் வரிச்சுமையை குறைக்க..Reform UK உறுதி
Reform UK promises tax free personal allowance: பிரித்தானியர்களின் வரிச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் தங்கள் கட்சி ஈடுபடும் என ராபர்ட் ஜென்ரிக் கூறியுள்ளார்.
சுமார் 40 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் வகையில், தனிநபர் வருமான வரி விலக்கு வரப்பை உயர்த்த Reform UK கட்சி திட்டமிட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு
பிரித்தானியாவில் வருமான வரி செலுத்தத் தொடங்கும் முன் ஒருவர் ஈட்டக்கூடிய வரிக்கு உட்படாத வருமான அளவான 'தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு', 2021-ஆம் ஆண்டு முதல் 12,750 என்ற அளவிலேயே மாற்றமின்றி நீடிக்கிறது.
தொழிலாளர்கள் மீதான இந்த 'மறைமுக வரிச்சுமையை' முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போதைய திட்டங்களின்படி இந்த வரம்பு மாற்றம் செய்யப்படாத நிலை 2031-ஆம் ஆண்டு வரை தொடரவுள்ளது.
இந்த நிலையில், பர்மிங்காமில் நடைபெற Reform UK கட்சியின் மாநாட்டில் ராபர்ட் ஜென்ரிக் ஆற்றவுள்ள தனது உரையில், வரலாற்றிலேயே தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அளவிலான உயர்வை செயல்படுத்துவதற்கான தனது திட்டங்களை விவரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் 100 நாட்களுக்குள்
சுமார் 40 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையில், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 15,000 பவுண்ட்கள் ஆக உயர்த்த Reform UK கட்சி திட்டமிட்டுள்ளது.
ராபர்ட் ஜென்ரிக் தனது முதல் பட்ஜெட்டில் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் 100 நாட்களுக்குள் வரிக்கு உட்படாத தனிநபர் வருமான வரம்பை 15,000 பவுண்டுகள் ஆக உயர்த்துவதாக Reform UK கட்சி கூறுகிறது.
இந்த வரம்பை 15,000 பவுண்டுகள் ஆக உயர்த்துவதன் மூலம், பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு சுமார் 500 பவுண்டுகள் சேமிப்பு கிடைக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக சுமார் 40 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என்றும் Reform UK கட்சி மதிப்பிட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |