ஜேர்மனியில் அகதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு... நீண்ட இடைவெளிக்குப்பின் தீர்ப்பு
ஜேர்மனியிலுள்ள புகலிட மையம் ஒன்றின் பாதுகாவலர்களும் சமூக சேவகர் ஒருவரும் அகதிகளை துஷ்பிரயோகம் செய்த வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு, ஜேர்மனியில், Burbach என்ற இடத்தில் அமைந்துள்ள புகலிட மையம் ஒன்றில் அகதிகள் உடல் ரீதியாகவும், வார்த்தைகள் மூலமாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பான காட்சிகள் வெளியாகி நாடு முழுவது பரபரப்பை ஏற்படுத்தின.
வெளியான அந்த காட்சிகளில் ஒன்றில், அடித்து சுயநினைவிழக்கச் செய்யப்பட்ட அகதி ஒருவரின் முகத்தின் மீது ஷூ காலை அழுத்தியபடி பாதுகாவலர் ஒருவர் நிற்கும் காட்சியும், மற்றொரு காட்சியில், வாந்தி எடுத்த ஒரு அகதியை அந்த வாந்தி இருக்கும் படுக்கையின் மீதே படுக்க கட்டாயப்படுத்தும் காட்சியையும் காணமுடிகிறது.
அந்த வழக்கில், தற்போது Siegen நகர நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட மூன்று முன்னாள் பாதுகாவலவர்களுக்கும் ஒரு சமூக சேவகருக்கும் 900 முதல் 3,500 யூரோக்கள் வரை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.