தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண்: குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை

By Balamanuvelan Mar 05, 2024 05:10 AM GMT
Report

பிரித்தானியாவில் தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவரின் குடும்பத்தினர், அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள்.

தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணி

2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்த ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31) என்னும் பெண், மலையுச்சியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்ததுடன், அவரது கர்ப்பத்திலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டது.

மலையுச்சியிலிருந்து விழுந்த ஃபவ்ஸியா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒருவரிடம், ’என் கணவரை என் அருகே வரவிடாதீர்கள், அவர் என்னை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.  

தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண்: குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை | Reinvestigate Suspicious Fall Deaths UrgeUGC

ஃபவ்ஸியா ஒரு சட்டத்தரணி ஆவார். திருமணமானதுமே கணவன் மனைவிக்குள் பிரச்சினை உருவானதைத் தொடர்ந்து, தனது கணவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணிய அவர், கணவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டத் துவங்கியுள்ளார்.

கணவர் தன்னை மிரட்டுவதை மொபைலில் பலமுறை பதிவு செய்ததுடன், இரண்டுமுறை பொலிஸ் நிலையம் சென்று, தன் கணவர் தன்னை மிரட்டுவது குறித்து புகாரும் பதிவு செய்துள்ளார். இறுதியில், ஃபவ்ஸியா தன் மரணத்துக்கு முன் திரட்டி வைத்த ஆதாரங்களே, அன்வர் குற்றவாளி என முடிவு செய்ய முக்கிய ஆதாரங்களாக உதவி அவரை சிறைக்கு அனுப்பிவைத்தன.

குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை

ஃபவ்ஸியாவின் மரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர், இப்படி குடும்ப உறுப்பினர்களால் அல்லது கணவனால் கொல்லப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் Killed Women campaign என்னும் அமைப்புடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை, ஒரு வாரத்துக்கு இரண்டு பெண்கள், தங்கள் கணவர் அல்லது முன்னாள் கணவரால் கொல்லப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

குற்றவியல் துறை நிபுணரான Jane Monkton Smith என்பவர் மேற்கொண்ட விசாரணை ஒன்றில், 2009இலிருந்து 2021வரை, 51 பெண்கள் ஃபவ்ஸியாவைப்போலவே உயரமான இடங்களிலிருந்து விழுந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்களில் 27 சந்தேகத்துக்கிடமானவை என கருதப்படும் நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஐந்து பேர் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளது.

தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண்: குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை | Reinvestigate Suspicious Fall Deaths UrgePA

17 பேர் உயரமான இடங்களிலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், இந்த சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாகவும், ஒருவர் கொலை செய்ததாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபவ்ஸியாவின் தாயாகிய Yasmin Javed, உயரமான இடங்களிலிருந்து விழுந்த பெண்கள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டாலன்றி, அவர்கள் கொல்லப்பட்ட காரணமாக இருந்தவர்கள் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிவிடக்கூடும்.

அந்தப் பெண்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில், அப்படி சந்தேகத்துக்குரிய வகையில் உயரமான இடங்களிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்களின் வழக்குகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மாப்பாணவூரி, சுதுமலை

23 Apr, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US