ரத்தன் டாடா அளித்த வாய்ப்பை நிராகரித்து... ரூ 7,000 கோடி நிறுவனத்தை நடத்தும் பெண்: அவரது தொழில்
பிஸ்லேரி நிறுவன உரிமையாளர் ரமேஷ் சவுகானின் ஒரே மகள் ஜெயந்தி சவுகான் ஆரம்பத்தில் நிறுவனத்திற்குள் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கினார்.
டாடா குழுமத்துடன்
அவரது தந்தைக்கு வயதாகி வருவதாலும், வாரிசுரிமை குறித்த கேள்வி அழுத்தமாக மாறியதாலும், பிஸ்லேரி நிறுவனத்தை விற்பனை செய்வது பற்றிய பேச்சுக்களும் எழுந்தன. இதில் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் டாடா குழுமத்துடன் முன்னெடுக்கப்பட்ட விவாதங்களும் அடங்கும்.
அப்போது ரத்தன் டாடா முன்வைத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராத நிலையில், பிஸ்லேரி நிறுவனத்தின் பொறுப்பை தானே ஏற்க முடிவு செய்தார் ஜெயந்தி.
துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜெயந்தி, ரெவ், பாப் மற்றும் ஸ்பைசி ஜீரா ஆகிய பிராண்டுகளின் கீழ் பல்வேறு குளிர்பானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிஸ்லரியை புதிய நிலைக்கு கொண்டு சென்றார்.
ஜாம்பவான்களுடன் போட்டி
ரிலையன்ஸ் காம்பா கோலாவை மீண்டும் அறிமுகப்படுத்த, பிஸ்லேரி ஒப்பந்தம் தோல்வியடைந்த பிறகு டாடா குழுமம் அதன் சொந்த குடிநீர் பிராண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்க, குளிர்பான சந்தையில் அப்போது எதிரும் புதிருமான போட்டி காணப்பட்ட நேரத்தில் ஜெயந்தி பிஸ்லேரி நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.
சுமார் ரூ.7,000 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் ஒரே வாரிசாக, ஜெயந்தி தற்போது ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற தொழில்துறை ஜாம்பவான்களுடன் போட்டியிடுகிறார்.
பிஸ்லரியுடனான அவரது ஈடுபாடு 24 வயதிலிருந்தே தொடங்கியது, தற்போது அவர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் பிராண்டிங் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |