ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Reliance Infra) நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பாரிய இலக்கை கொண்டுள்ளது.
ரூ.3,000 கோடி மதிப்புள்ள 155mm artillery குண்டுகள் மற்றும் கட்டுமான பொருட்களை (aggregates) 2027-ஆம் நிதியாண்டிற்குள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் செயல்பட்டுவருகிறது.
இந்நிதியாண்டில் மட்டும், ரூ.1,500 கோடி மதிப்புள்ள பாரிய அளவிலான குண்டுகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ரூ.100 கோடி வரை குண்டுகள் மற்றும் (கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள்) ஏற்றுமதி செய்துள்ள ரிலையன்ஸ், இந்தியாவின் முக்கிய 3 பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உயர முயல்கிறது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் முக்கிய ஏற்றுமதி சந்தைகள்:
- ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள்
- தென்கிழக்கு ஆசியா
இதில் ஐரோப்பாவில் மட்டும் குண்டுகள் restocking சந்தையின் அளவு ரூ.4 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.
Dhirubhai Ambani Defence City (DADC):
மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் Dhirubhai Ambani Defence City உருவாகிறது.
ரூ.5,000 கோடி முதலீட்டில் உருவாகும் இது, இந்தியாவின் தனியார் துறையில் மிகப்பாரிய பாதுகாப்பு திட்டமாகும்.
உற்பத்தி திறன்:
- வருடத்திற்கு 2 லட்சம் குண்டுகள்
- 10,000 டன் வெடிப்பொருட்கள்
- 2,000 டன் propellants
Rheinmetall AG உடன் கூட்டணி:
ஜேர்மனியின் Rheinmetall AG நிறுவனத்துடன் உருமாற்றம், கூட்டுச்சந்தைப்படுத்தல் மற்றும் வெடிப்பொருள் விநியோகம் ஆகியவற்றில் பங்குபெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Reliance Infra defence exports, BrahMos 155mm ammunition, Dhirubhai Ambani Defence City, Reliance Rheinmetall partnership, India defence manufacturing, Artillery export India, Ratnagiri defence project, Indian private defence companies, Reliance Defence export goals, Rheinmetall India partnership