கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளை எதிர்கொள்ள வேண்டுமா? அப்போ கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடுங்க
Vaccine
corona
foods
By Kishanthini
பொதுவாக கொரோனா தடுப்பூசியால் ஊசி போட்ட இடத்தில் புண், தலை வலி, காய்ச்சல், உடல் வலி, பலவீனம் மற்றும் உடல் சோர்வு போன்ற கடுமையான பக்கவிளைவுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இத்தகைய பக்கவிளைவுகள் தடுப்பூசி போட்ட 2-3 நாட்களுக்குள் சரியாகிவிடும்.இருப்பினும் எந்தவொரு வேலையும் சரிவர செய்யமுடியதாக நிலை ஏற்படுதாம்.
இதனை எதிர்கொள்ள ஊசி போட்ட பின் ஒருசில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு பலத்தை தருகின்றது.
அதிலும் கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும் சில உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றை தவறமால் எடுத்து வந்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், அதன் பக்கவிளைவுகளைக் குறைக்க, மஞ்சளை சுடுநீரில் போட்டு குடிக்கலாம் அல்லது அன்றாட உணவில் சேர்த்து வரலாம்.
- இஞ்சி மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. அதற்கு இஞ்சியை அன்றாட உணவில் சமைக்கும் போது சேர்க்கலாம் அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம்.
- உங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின் மிகுந்த சோர்வாக இருந்தால், பச்சை இலைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- தடுப்பூசி போட்ட பின், ஆரஞ்சு, முலாம் பழம், வெள்ளரிக்காய் மற்றும் பீச் ஆகியவற்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
- உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க, தானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகள் குடலால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சி, உடலுக்கு அதை ஆற்றலாக மாற்றும். எனவே தானிய வகை உணவுகளை கொரோனா தடுப்பூசி போட்ட பின் சாப்பிடுவது மிகவும் நல்லது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US