கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்து வேலை செய்யவில்லை! சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கம்? கடும் அதிர்ச்சியில் மக்கள்
கொரோனா சிகிச்சைக்கான பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து நீக்குவது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலை முன்னணி மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வே என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில், கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இது உயிர்காக்கும் மருந்தல்ல, அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் தர முடியாது என பலவிஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறினாலும், ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தியாவில் இந்த மருந்தை வாங்குவதற்கு மக்களின் கூட்டம் ஒரு சில பகுதிகளில் அலை மோதியது. இந்நிலையில், டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் டி.எஸ்.ரானா இந்த ரெம்டெசிவர் மருத்து குறித்து கூறுகையில், பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறைப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த ஒரு நோயாளியிடம் இருந்து ரத்தத்தை எடுத்து மற்றொரு கொரோனா தொற்று நோயாளிக்கு வழங்கப்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்ட நோயாளியின் உடம்பில் செலுத்தப்படும் ரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை அழிக்கும் என சொல்லப்பட்டது. அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் இந்த சிகிச்சை முறை தொடங்கப்பட்டாலும், ஓராண்டில் இதற்கு பலன் இல்லை என உறுதியாகி தற்போது மத்திய அரசு நீக்கி உள்ளது.
இனி பிற மருந்துகளைப் பற்றி பார்த்தோமானால், கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவர் எந்த மாயாஜாலத்தையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் செயல்படவில்லை.
எனவே விரைவில் இந்த தடுப்பு மருந்தும், மத்திய அரசின் சிகிச்சை பட்டியலில் இருந்து விரைவில் நீக்கப்படலாம். தற்போது நாங்கள் வைரசை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்கிறோம். இந்த தொற்றுநோய் குறித்து முழு அறிவையும் மருத்துவ சமூகம் பெற்றதும், கொரோனாவுக்கு முடிவு கட்டப்படும் என்று கூறியுள்ளார்.
இதனால் இந்த மருந்தை வாங்கிய பல மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.