மலைக்குன்றில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்: கேரள அரசின் அதிரடி முடிவு!
கேரளாவின் குறும்பாசி மலைக்குன்றின் மேல் 48 மணிநேரமாக சிக்கிக்கொண்ட இளைஞர் மீட்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது கேரளா வனத்துறை வழக்கு பதிவு செய்ததுள்ளது .
இந்தியாவின் கேரளா மாநிலம் செரட் என்ற பகுதியில் உள்ள குறும்பாசி மலைக்குன்றில் பாபு என்ற இளைஞர் சுமார் 48 மணிநேரம் கீழ் இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அவரை காப்பாற்றும் பணியில் இந்தியா ராணுவத்தின் அவசர கால மீட்பு குழு இறங்கி அவரை கடந்த புதன்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாபு (23) மீட்கப்பட்ட பிறகு அவர் மீது எந்த ஒரு வழக்கும் கேரளா அரசாங்கம் பதிவு செய்யாது என கேரளா வனத்துறை அமைச்சர் சசீந்திரன் என தெரிவித்து இருந்தார்.
மேலும் பாபு மலைக்குன்றில் இருந்து மீட்கப்பட்ட பிறகு மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பட்டார்.
இந்த நிலையில் பாபு(23) மீது அரசாங்கத்திற்கு சொந்தமான வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக SEC27 கீழ் கேரளா வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் வரும் வியாழக்கிழமை அவரை முதல் நிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாபு உடன் இணைந்து மலை ஏறிய மற்ற மூன்று இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவது குறித்து ஆலோசித்து வருவதாக வன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்குபதிவு குறித்து கேரளாவின் வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவிக்கையில் அத்துமீறி நுழைந்ததற்கான சட்டபூர்வ வழிமுறைகளை கடைபிடித்துதான் ஆகவேண்டியுள்ளது.
இது அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழையும் மற்ற இளைஞர்களும் ஒரு முன் எச்சரிக்கையாக அமையும் என தெரிவித்துள்ளார்.