தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 2வது நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானங்ள் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஜூன் 21ம் திகதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.
கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுபோல குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப்பெற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுவதால் இந்த கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றம் அவை மாண்புக்கு உகந்ததாக இருக்காது.
எனவே, வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.