19 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த சம்பவம்., பழி தீர்த்த சகோதரன்! உ.பி.யில் நடந்த பரபரப்பு சம்பவம்
மனிதன் பழி தீர்க்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்கு காலம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்கட்டடாக மாறியுள்ளது.
இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில், ஷாஜஹான்பூரில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
அக்ஷய் மற்றும் அவரது நண்பர் பப்லு ஆகிய இருவரும் நேற்றிரவு, லோடிப்பூரை சேர்ந்த நரேன் காஷ்யப் எனும் 40 வயது நபரை, தனியார் மருத்துவமனையில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொன்றனர் .
நகரத்தையே பரபரப்பு அடைய வைத்த இந்த கொலை சம்பவம், பழி வாங்குவதற்காக செய்யப்பட சம்பவம் என விசாரணையில் தெரியவந்ததாக ஷாஜஹான்பூர் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட நரேன், இந்தக் கொலையின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் அக்ஷயின் சகோதரனை 2002-ஆம் ஆண்டு இதேபோல் சுட்டு கொலை செய்ததாக பொலிஸார் கூறினர்.
விசாரணையில், அக்ஷய் நரேனை பழி வாங்குவதற்காக கடந்த 19 ஆண்டுகளாக முயற்சித்து. இப்போது அதனை தனது நண்பனின் உதவியுடன் நிகழ்த்தியுள்ளது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நரேனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அக்ஷய் மற்றும் பப்லுவை பொலிஸார் வலைவீசி தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.