தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு ரிப்பன் பக்கோடா.., எப்படி செய்வது?
தீபாவளி பண்டிகை என்றாலே நாம் அனைவரும் வீட்டில் இனிப்பு, காரம் என பண்டங்கள் செய்து சாப்பிடுவது வழக்கம்.
அந்தவகையில், சுவையான மொறுமொறு ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை- 1 கப்
- அரிசி மாவு- 1 கப்
- கடலை மாவு- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- வெண்ணெய்- 5 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு சல்லடையில் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் உருக்கிய வெண்ணெயை வெதுவெதுப்பாக இருக்கும்போது சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
இதற்கடுத்து இதில் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை முறுக்கு அச்சில் சேர்த்து பிழிந்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |